ஏன் இந்த சலசலப்பு – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம்!

  • July 1, 2020 / 12:46 PM IST

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை அவரது இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பற்றி கடந்த ஒரு மாத காலமாகவே இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. வனிதா விஜயகுமாருக்கு இது மூன்றாவது திருமணம். பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார் நிம்மதியாக கல்யாணம் செய்துகொண்டார் என்று அனைவரும் நினைத்த போது, வனிதா மற்றும் இயக்குனர் பீட்டர் பால் திருமணம் முடிந்த அடுத்த கணமே பீட்டரின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார்.

மேலும் அவரது முதல் மனைவி வெளிவந்து கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்தார். இந்த விவகாரம் குறித்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா விஜயகுமார் ஆவேசமாக பேசியிருந்தார். இவ்வாறு இவர்களுக்கு இடையில் ஒரு சலசலப்பு மூண்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லட்சுமிராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது” நான் எத்தனையோ நல்ல விஷயங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கிறேன். ஆனால் எதற்கும் இப்படி ஒரு கவனம் கிடைக்கவில்லை. நான் வனிதாவின் முடிவைப் பற்றி பேசவில்லை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிக்கவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கு பின் அவர் வாழ்க்கை சந்தோஷமாக மாறுகிறது என்று நானும் மகிழ்ச்சி தான் அடைந்தேன். ஆனால் நான் சொன்னது முறையாக விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது பற்றி மட்டும்தான். இவ்வளவு படிப்பறிவு இருக்கும் வனிதா விஜயகுமார் இதை எப்படி செய்தார் என்றுதான் நான் கேள்வி கேட்டிருந்தேன். அவர் முதல் மனைவியின் பேட்டியை பார்த்த விட்டு அந்த ஆதங்கத்தில் தான் அவ்வாறு பதிவிட்டுருந்தேன்” என்றிருக்கிறார்.

மேலும் இந்த பிரச்சனை பற்றியும் அவரது கருத்துகள் பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus