பார்ட் 2-வில் ‘சந்திரமுகி’ ரோலில் நடிக்கப்போறது யாரு?… லாரன்ஸ் போட்ட ட்வீட்!

  • August 1, 2020 / 10:19 PM IST

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். மேலும், பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வை இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கப்போகிறார். இதனை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார். இதில் ‘சந்திரமுகி’ ரோலில் மீண்டும் ஜோதிகாவே நடிக்கவிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின், சிம்ரன் என்று சொல்லப்பட்டது.

கடந்த சில நாட்களாக கியாரா அத்வானி என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹீரோயின் தொடர்பாக பரவி வரும் அனைத்து செய்திகளும் வதந்தியே. இப்போது ஸ்க்ரிப்ட் வொர்க் பரபரப்பாக நடந்து வருகிறது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு தான், தயாரிப்பு நிறுவனமே யார் ஹீரோயின் என முடிவெடுப்பார்கள். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus