ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் – அதுவும் நூற்றுக்கு மேல்…!

  • June 15, 2020 / 06:11 PM IST

பிரபல தமிழ் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் சனிக்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில், மது பாட்டில்கள் கடத்தி வரும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

தமிழில் படையப்பா, பாகுபலி போன்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்தவர் ரம்யா கிருஷ்ணன். தன் குணச்சித்திர நடிப்பால் எப்போதும் அவரது படங்களில் தனித்துவமாக தெரியும் இவர் , இந்த லாக் டவுனில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் எப்பொழுதும் போல போலீஸ் வாகன சோதனை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இவரின் இனோவா காரில் சோதனை மேற்கொண்டபோது அதிக அளவில் மது பாட்டில்கள் இருந்தது. போலீசார் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரம்யாகிருஷ்ணன் டிரைவரை மட்டும் கைது செய்தனர்.

காரில் அப்போது ராதாகிருஷ்ணன் இருந்ததாகவும் அவர் தனக்கு இந்த மதுபாட்டில்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகின. இதைப்பற்றி இன்னும் அவர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வேறு ஊர்களிலிருந்து மதுபாட்டில்கள் கொண்டுவருவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்துள்ளது. அதனால் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சோதனையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின்
காரில் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus