இராமேஸ்வரத்தில் லோகேஷ் !

  • June 2, 2022 / 03:42 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது . மல்டி ஸ்டாரர் படமாக இந்த படம் உருவாகி உள்ளதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது. மேலும் ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் லோகேஷின் திரைக்கதை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் வைத்துளார்கள்.

இதனிடையே படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் ரத்ன குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்கள் ஆகியோர் இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று அங்குள்ள சிவனை வழிபட்டுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை இயக்குனர் ரத்ன குமார் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus