‘கொரோனா’ லாக் டவுனில் ‘மாஸ்டர்’ இயக்குநர் என்ன பண்றார்னு தெரியுமா?

  • August 8, 2020 / 08:00 PM IST

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார்.

ஆக்ஷன் த்ரில்லர் படமான இது கடந்த 2019-யில் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இப்போது ‘மாஸ்டர்’ ரெடியாக உள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

‘மாஸ்டர்’-க்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து இயக்க, அவரிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம் லோகேஷ். இதனை ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தயாரிக்கப்போகிறாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தற்போது, கோலிவுட் வட்டாரத்தில் இருந்து ஒரு சூப்பரான செய்தி கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய ஸ்க்ரிப்ட்டை எழுதி வருகிறாராம். இதில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus