SPB குறித்து பேசிய பாடலாசிரியர் விவேகா- இதைத்தான் சொன்னாராம்!

  • October 1, 2020 / 01:30 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலை கூட தெரிவிக்க முடியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இணையதளம் முழுவதும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்பிபி கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் பாடிய போது அவருடன் இருந்த பாடல் எழுத்தாளர் விவேகா தனது அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

“நான் ரஜினி சாருக்கு இதுதான் பாடல் எழுதுவது முதல் முறை. அதுமட்டுமின்றி அந்த பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் பாடுவதால் ஆர்வமாக பார்க்க சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வரியை பாடும் பொழுது இது கண்டிப்பாக பேசப்படும் என்று என்னை கூப்பிட்டு பாராட்டினார் எஸ்பிபி சார்” என்று தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேகா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus