இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ‘மாநாடு’ ஹீரோயின்!

  • November 2, 2021 / 04:06 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். பாப்புலர் இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிஸ்சி தம்பதியினரின் மகளான கல்யாணி, அறிமுகமான முதல் தெலுங்கு படமே நாகார்ஜுனாவின் மகன் அகிலுடன் தான். அது தான் ‘ஹலோ’.

அதன் பிறகு நடிகை கல்யாணிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘சித்ரலஹரி, ரணரங்கம்’ என படங்கள் குவிந்தது. பின், தமிழில் அறிமுகமான கல்யாணிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனுடன் தான். அது தான் ‘ஹீரோ’. ‘ஹீரோ’ படத்துக்கு பிறகு ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’யில் நடித்திருந்தார் கல்யாணி.

இப்போது கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் தமிழில் சிலம்பரசனின் ‘மாநாடு’ மற்றும் மலையாளத்தில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மாநாடு’ படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், கல்யாணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus