ரசிகருக்கு நாசூக்காக பதில் கூறிய நடிகர் மாதவன்!

  • December 17, 2020 / 09:15 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் இணைந்து “மாறா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் இந்த திரைப்பட குழு இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த படம் வெளியிடப்படும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

திலீப் குமார் இயக்கத்தில் பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சார்லி படத்தின் கதையை கொண்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருப்பதாகவும் இந்த படத்தை வருகிற ஜனவரி 8ம் தேதி, வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவலை திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாதவன், ரசிகை ஒருவர் அவர் மீது 20 வருடமாக கிரஸ்ஸில் இருப்பதாக கூறியதற்கு “யப்பா” என்று நாசூக்காக பதில் கூறி தப்பித்துள்ளார். அந்த பதில் வைரலாக பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus