நள்ளிரவில் வெளியேறிய மைனா ! என்ன காரணம் தெரியுமா ?

  • January 20, 2023 / 04:59 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ஏ.டி.கே கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .இந்த வாரம் இதுவரை எலிமினேஷனலில் இருந்து வெளியான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டின் உள்ளே வந்தனர் . இதனால் பிக் வீடு ஒரே கொண்டாட்டமாக உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க பணப்பெட்டி டாஸ்க் தொடங்கியது …. 3 லட்சம் பணத்தை வந்த உடனே கதிரவன் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் . இதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டது . அதனை 13 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் சென்றுள்ளார் .

இந்நிலையில் மீதம் 4 போட்டியாளர்கள் வீட்டில் இருந்த நிலையில் நள்ளிரவு மைனா வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இன்னும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus