மீண்டும் பொன்னியின் செல்வனை இயக்கும் மணிரத்தனம்!!

  • December 12, 2022 / 04:19 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் ( செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இது ஒரு பக்கம் இருக்க பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு
ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்தனம் விடுபட்ட சில காட்சிகளை ஜனவரி மாதம் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பாகத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கி உள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus