கெளதம் கார்த்திக்கை காதலித்து வருவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த மஞ்சிமா மோகன்… திருமணம் எப்போது?

  • October 31, 2022 / 07:47 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக எட்டு மலையாள படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த மலையாள படம் தான் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’.

அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் என்ட்ரியானார். அதுவும் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில்.. பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனின் நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மஞ்சிமா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், FIR’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது மஞ்சிமா மோகன் நடிப்பில் தமிழில் ஒரு படமும், மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்ற படமும் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நடிகை மஞ்சிமா மோகன், பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கை காதலித்து வருவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. ‘தேவராட்டம்’ என்ற படத்தில் கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர்கள் இருவரும் காதலித்து வருவதை இன்ஸ்டாகிராமில் உறுதிபடுத்தியதுடன், மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus