அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

  • September 11, 2020 / 04:51 PM IST

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா.

இவர் அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக டாங்கோ என்ற நடன அமைப்பையும் கற்று வந்தார். ஆனால் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளதால் அந்த வேலைகளில் மும்மரமாகவுள்ள நிஹாரிகாவால் இந்த பட வேலைகளில் தற்போது ஈடுபட முடியாத நிலையில் இவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது நடிகை மேகா ஆகாஷை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம் திரைப்படக் குழு.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சுவாதினி கூறியுள்ளதாவது, நிஹாரிகா தன் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார், அதனால் அவரால் வரமுடியாத நிலையில் மற்ற ஹீரோயின்களை நாடினோம், ஆனால் புது நடன அமைப்பை கற்பதற்கு அனைவரும் தயக்கம் காட்டிய நிலையில் மேகா ஆகாஷ் படத்தின் ஒரே வரியை கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டார். எனவே அவருடன் ஒப்பந்தம் முடிந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அவர் புது நடன அமைப்பை கற்றுக் கொள்வார்” என்று கூறியுள்ளார்.

சுவாதினி ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற அக்டோபர் 27ம் தேதியில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் ஒரு காமெடி டிராமா வகையறா என்றும் செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus