திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு!

  • September 26, 2020 / 04:00 PM IST

நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் அரசு திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தவும், 75 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு நடக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள கடம்பூர் ராஜு, மத்திய அரசின் சுகாதாரத்துறை திரையரங்குகள் திறக்கப்பட்டால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான அறிக்கையை வெளியிடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவ்வாறு மத்திய அரசின் சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு திரையரங்குகளை திறக்கலாம் என்று உறுதியளித்தால், தமிழகத்தில் தான் முதலில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus