நடிகை த்ரிஷாவை கண்டித்து மீராமிதுன் செய்துள்ள டுவிட்!

  • July 10, 2020 / 07:15 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீராமிதுன், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் நடிகை திரிஷா கடைசியாக வெளியிட்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி தன் புகைப்படத்தை மார்ஃப் செய்துள்ளதாகவும், இதை திரிஷா மீண்டும் தொடர்ந்தால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் நடிகை திரிஷா சோசியல் மீடியாவில் இருந்து டிடாக்ஸ் செய்து கொள்வதாக ஒரு பதிவை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்த திரிஷா பல நாட்களுக்கு பின் நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அது வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடையே வைரலானது. அனைவரும் அவரை “வெல்கம் பேக்” என்று கமெண்ட் செய்து வரவேற்றார்கள்.

இந்தப் படத்தை பார்த்த நடிகை மீரா மிதுன் தன் படத்தை திரிஷா மார்ஃப் செய்து பதிவிட்டுள்ளார் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த பதிவு வந்த சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளுகிறார்கள். அதுமட்டுமின்றி மீம் கிரியேட்டர்ஸ் தங்கள் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். கூடிய விரைவில் மீராமிதுனின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு அனைத்து மீம்களிலும் தோன்றலாம்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus