லாக் டவுன் டைமில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ‘இன்று நேற்று நாளை’ ஹீரோயின்!

  • September 14, 2020 / 02:30 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘அமர காவியம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை மியா ஜார்ஜ்.

அதன் பிறகு ‘இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம், எமன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, மியா ஜார்ஜ் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், தொழிலதிபர் அஷ்வின் பிலிப்ஸ் என்பவரை மியா ஜார்ஜ் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் (செப்டம்பர் 12-ஆம் தேதி) இவர்களின் திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus