‘பிக் பாஸ் 5’யில் எலிமினேட்டான சுருதிக்கு நமீதா மாரிமுத்து கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

  • November 11, 2021 / 11:44 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நமீதா மாரிமுத்து, சுருதி இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நமீதா மாரிமுத்துவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது சுருதிக்கு சர்ப்ரைஸ் பர்த்டே கிஃப்ட்டும் கொடுத்திருக்கிறார் நமீதா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus