நானே வருவேன் படத்தின் புதிய பாடல் வெளியானது .

  • September 28, 2022 / 08:17 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகுவதற்கு ஒரு நாள் முன்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் அந்த வகையில் இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடல் வீரா சூரா நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நானே வருவேன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது . இந்த செய்தி செல்வராகவன் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது . இந்நிலையில் தற்போது படக்குழு நானே வருவேன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . யுகபாரதி வரிகளில் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus