அந்த வார்த்தையை சொன்ன செல்வா மாறிடுவார் !

  • December 12, 2022 / 08:29 PM IST

‘திரௌபதி’ , ருத்ரதாண்டவம் , போன்ற படங்களை இயங்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க போவதாக அறிவிப்பு வந்தது. பிறகு அந்த படத்திற்கு பகாசூரன் என்று தலைப்பு வைத்தனர் .

இந்த படத்தில் சதுரங்க வேட்டை , கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளார் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நட்டி நட்ராஜ் செல்வராகவன் பற்றி பேசியுள்ளார் . அதில் ” செல்வராகவனை எனக்கு ஒரு இயக்குநராகத்தான் தெரியும். சாணிக்காயிதம் படத்தில் அவரை ஒரு நடிகராப் பார்த்தேன். ஆனால் அந்தப் படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துல சேர்ந்து நடிச்சுட்டோம்.

பகாசூரன் படத்தில் ஒரு விஷயத்தைத் தேடி நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகள்ல டிராவல் செய்வோம். அதனால் எனக்கும், அவருக்கும் குறைந்த காம்பினேஷன் காட்சிகள்தான் இருந்தன. ஸ்பாட்ல சாதாரணமாத்தான் நின்னு பேசிட்டிருப்பார். ஆனா ரோல், கேமிரா, ஆக்சன்னு சொல்லிட்டா போதும் அப்படியே பீமராஜா மாதிரி ஆயிருவார்.

ஒவ்வொரு காட்சிலேயும் அவர் நடிச்சு முடிச்சதும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். அவர் என்னைப் பார்த்து லைட்டா சிரிப்பார். அவர்கிட்ட இந்த அளவுக்கு பர்பார்மென்ஸ் இருக்குறதுனால தான் அவர் இயக்கத்துல நடிக்கிறவங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியுதுன்னு நினைக்கிறேன்..” என்று கூறியுள்ளார் நட்டி நட்ராஜ்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus