நயன்தாரா திரைப்பட இயக்குனரின் அடுத்த டிரைலிங்குவல் திரைப்படம்!

  • September 3, 2020 / 09:30 AM IST

2017 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில் வெளியான “அவள்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிலிந்த் ராவ்.

இவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து “நெற்றிக்கண்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

தற்போது மிலிந்த் ராவ் தனது இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் நேச்சுரல் த்ரில்லர் திரைப்படம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் கூறியுள்ளதாவது, நெற்றிக்கண் திரைப்படத்தை தொடர்ந்து, தான் ஒரு த்ரில்லர் திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ராணா டகுபதி ஹீரோவாக நடிப்பார் என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் காட்சிகளை கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நெற்றிக்கண் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தவுடன் தனது அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவள் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அதன் வேலைகளையும் விரைவில் தொடங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus