எழும்பூரில் சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா !

  • January 4, 2023 / 06:35 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா . இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம் கனெக்ட் . இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது . கடந்த ஆண்டு நயன்தாராவுக்கும் அவரது காதலரான விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது .

பிறகு இருவரும் தங்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததை அறிவித்து மகிழ்ந்தனர் . விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அனைத்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம் . அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருந்தனர் .

இந்நிலையில் இன்று சாலையோர மக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுகளை வழங்கினார் நயன்தாரா .சென்னை எழும்பூர் அருகே உள்ள சாலையோர மக்களிடம் நேரடியாக சென்ற நயன்தாரா, பரிசு பொருட்களை வழங்கினார். அங்கிருந்த அனைவருக்கும் பரிசு பொருளை கொடுத்த பின்னர் நயன்தாரா தனது கணவருடன் திரும்பிச் சென்றார். இது குறித்த புகைப்படம் வீடியோவில் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus