Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

  • December 29, 2023 / 09:08 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகமான முதல் படமே நயன்தாராவுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்த படம் தான் ‘ஐயா’. இயக்குநர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக சரத்குமார் நடித்திருந்தார்.

 

அதன் பிறகு இரண்டாவது படமான ‘சந்திரமுகி’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. ‘சந்திரமுகி’ படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன், பாஸ் (எ) பாஸ்கரன், தனி ஒருவன், நானும் ரௌடி தான், அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல், அன்னபூரணி’ என படங்கள் குவிந்தது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையில் தான் சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை குறிப்பிட்டு, தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus