வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகிறது !

  • November 22, 2022 / 06:25 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது
நாக சைதன்யாவின் என்சி22. படத்தை இயக்கி வருகிறார் . தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் .

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், என்சி22 படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது .

நடிகர் நாக சைதன்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை நாளை வெளியாக உள்ளது .
மேலும் முதல் பார்வைக்கு முன்னதாக ஒரு போஸ்டர் மற்றும் ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது . மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus