அயல் நாட்டில் ப்ரியா பவானி ஷங்கர் !

  • August 17, 2022 / 11:10 AM IST

ரத்ன குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பலப்படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது‌.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் சிறந்த கதையை தேர்ந்த நடிப்பதில் சற்று தடுமாறி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படம் வெளியானது .இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது .

தற்போது ப்ரியா பவானி ஷங்கர் அயல் நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் . தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார் .இந்நிலையில் நேற்று ஒரு புதிய வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார் .தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus