முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று கதையில் இணைந்த புது டெக்னீசியன்!

  • July 31, 2020 / 06:37 PM IST

சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது. இந்த செய்தி வெளியான முதலே, இந்த படத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும். மேலும் விஜய் சேதுபதி முத்தையா முதலியாரிடம் இந்த படத்தை பற்றி பேசிய பொழுது தான் என்றுமே கிரிக்கெட் பார்த்ததில்லை என்றும் தனக்கும் கிரிக்கெட்டிர்க்கும் மிகவும் தூரம் என்றும் கூறியிருந்தாராம். அப்போது முத்தையா முரளிதரன் இதுதான் தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் தேவையான ஒன்றென்று குறிப்பிட்டார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வேண்டாமென்று பலர் கூறியிருந்ததாகவும் இருப்பினும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கண்டிப்பாக நடிக்க உள்ளார் என்றும் செய்தி தெரிவிக்கிறது.

எம்எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ராணா டகுபதி சேர்ந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று முத்தையா முரளிதரன் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். தமிழில் உருவாகவிருக்கும் இந்த படம், பின் பல மொழிகள் வெளியாகும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே வெளியான “விக்ரம்வேதா” படத்தில் இசையமைத்த ஷாம் சி.எஸ் இந்தப் படத்திற்கும் இசை அமைக்க உள்ளதாக திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாகவும் லாக்டோன் முடிந்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus