துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஒரு போர் காதல் காவியம்’விரைவில்!

  • July 28, 2020 / 04:48 PM IST

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

தமிழில் 2014 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான “வாயை மூடி பேசவும்” படத்தின் மூலம் அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து “நடிகையர் திலகம்” படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துல்கர் சல்மான். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளையொட்டி இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகப்போகும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பெயரிடப்படாத இந்த படத்தின் போஸ்டரின் மூலம் நடிகர் துல்கர் சல்மான் “ராம் எனும் ஒரு ராணுவ வீரராக” நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 1960-களில் போரின் நடுவில் நடந்த ஒரு காதல் கதை பற்றி இந்தப் படம் அமையும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனரான ஹனு ராகவாபுடி இயக்குகிறார். வைஜயந்தி ஃபிலிம்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இந்த படத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள். விஷால் சந்திரசேகர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக யார் நடிக்கிறார் என்று அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், பூஜா ஹெட்ஜ் நடிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ப்ரோடெக்ஷன் வேலைகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு இந்த வருட கடைசியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus