‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய நிதி அகர்வால்!

  • May 19, 2021 / 11:50 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. அதில் ஒரு படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’. இன்னொரு படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. உதயநிதி படம் மட்டுமின்றி நிதி அகர்வால் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர்.

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus