தனுஷ் மீது போலீஸில் புகார் கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி… என்ன காரணம் தெரியுமா?

  • January 19, 2022 / 06:39 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, கீ, ராஜவம்சம்’ என படங்கள் குவிந்தது.

நிக்கி கல்ராணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, நிக்கி கல்ராணி நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தனுஷ் என்பவர் மீது புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் கொடுத்த புகாரில் “ராயப்பேட்டையில் உள்ள எனது வீட்டில் வேலை செய்து வந்த தனுஷ் என்பவர் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விலை உயர்ந்த கேமரா, ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் சில துணிகளை திருடிச் சென்று விட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.1.25 லட்சம்” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை கைது செய்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus