போதைப் பொருள் விவகாரம்… நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா கைது!

  • September 8, 2020 / 09:38 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் ‘டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா’ என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணியும் பாப்புலர் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ என்ற படத்தில் மட்டுமே நடித்த சஞ்சனா கல்ராணி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில், கன்னட திரையுலகில் பல பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் பிரபல கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் புகார் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நிமிர்ந்து நில்’ (தமிழ்) படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதோடு, அவரை கைது செய்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus