ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியாவின் அதிரடி பதில்கள்!

  • July 11, 2020 / 02:42 PM IST

2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த “களவாணி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஓவியா. மலையாளம் திரையுலகின் மூலம் அறிமுகமான ஓவியா, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

மெரினா, கலகலப்பு, மூடர்கூடம், யாமிருக்க பயமேன், மதயானை கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், 90 எம்எல், முனி4, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அவரது குணத்திற்காக பெற்றார். இவருக்கு ஓவியா ஆர்மி கிரியேட் செய்து ரசிகர்கள் குவிந்தார்கள். இதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இவர் தற்போது நரேஷ் சம்பத் இயக்கத்தில் “ராஜபீமா” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி “சம்பவம்” எனும் படத்திலும் நடிக்கவுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்று பல ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

ஆனால் இவர் யாரையுமே ட்விட்டர் பக்கத்தில் தொடர்வதில்லை. இதைப்பற்றி இவரது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு” யாரையும் எனக்கு தொடர விருப்பமில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் எனக்கு எந்த வித ஆர்வமும் இல்லை” என்று நச்பதிலை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் கல்யாணம் பற்றிய சர்ச்சையான ஒரு விஷயத்தையும் பேசியுள்ளார். கணவன் பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஒரு நேரலையில் கேட்டதற்கு “எனக்கு வாழ்க்கை துணை தேவையில்லை” என்று நேரடியாக பதிலளித்திருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்வை கெடுப்பதற்கு பதில் சுயன்பம் செய்து கொள்வது மேல் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியலில் ஈடுபட ஏதாவது நோக்கம் உள்ளதா என்ற கேட்ட கேள்விக்கு “தேவை இருந்தால் வருவேன்” என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு தன் அதிரடி பதில்களால் ரசிகர்களை ஆட வைத்துள்ளார் ஓவியா. இவரின் இந்த பேச்சுக்கும் குணத்திற்கும்தான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் குவிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus