பா.ரஞ்சித்தால் பாராட்டப்பட்ட நடிகை !

  • June 21, 2022 / 12:55 PM IST

கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி . அதன் பிறகு பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .

சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஷியாம் சிங்காராய் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனர் பா.ரஞ்சித் ‘விராட பர்வம்’ படம் குறித்து தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் ‘விரத பர்வம்’ என்று தெரிவித்துள்ளார் . மேலும் நடிகர் ராணா , சாய் பல்லவி மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோரை பாராட்டி உள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus