ஆட்சி மாறினாலும் பிரச்சனை முடியவில்லை !

  • January 30, 2023 / 07:01 PM IST

நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வருகிறார் . கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது . தங்கலான் என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர் .

இந்நிலையில் பா.ரஞ்சித் பொம்மை நாயகி என்கிற படம் தயாரித்து உள்ளது . வருகின்ற மாதம் 3 -ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது . இந்த படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார் பா.ரஞ்சித் அப்போது அவரிடம் வேங்கைவயல் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது பதில் அளித்த இயக்குநர் பா.ரஞ்சித் ” தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் தமிழகத்தில் சாதி , தீண்டாமை கொடுமை மாறாமல் அப்படியே இருக்கிறது மேலும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களாக சொல்லிக்கொண்டு இருக்கும் தி.மு.க அரசு இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் .

மேலும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இது போன்ற பிரச்சனை குறையவில்லை என்றும் தொடர்ந்து இது மாதிரியான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது . இந்த பிரச்சனைகளை தீவிரமாக கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழக அரசுக்கு இருக்கிறது . மேலும் சில நடவடிக்கைகள் அரசு எடுத்தாலும் மேலும் துரிதமாக தமிழக அரசு செயல் பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus