மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிப்பு!

  • January 26, 2021 / 04:12 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1967-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் இடம்பெற்றிருந்தது. இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.

சாவித்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். அதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தினமும் இவரின் பாடலை கேட்காத ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தன் குரலால் அனைவரின் லைக்ஸையும் குவித்தவர் எஸ்.பி.பி.

சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார். தற்போது, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. குடியரசு தினத்தன்று (ஜனவரி 26-ஆம் தேதி) ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதேபோல், இன்றும் (26.01.2021) பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி-க்கு மட்டுமில்லாமல் பிரபல பின்னணி பாடகி சித்ராவிற்கு பத்ம பூஷன் விருதும், பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus