கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பெண்குயின் திரைப்படத்தின் சஸ்பென்ஸ்!

  • June 17, 2020 / 06:40 AM IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”.

இதை புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே “பெண்குயின்” திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மகனை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் தாயாகவும், நிறைமாத கர்ப்பிணியாகவும் ,பல பரிணாமங்களில் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி “பெண்குயின்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு டிரெய்லரை தனுஷ், மோகன்லால், நானி ஆகியோர் வெளியிட்டனர். காணாமல் போன மகனை தேடி அலையும் அம்மாவாக கீர்த்தி சுரேஷ் பரிதாபமாக டிரெய்லர் ஆரம்பத்தில் காட்சியளிப்பது நமக்குள் ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொள்ள
செய்கிறது.

கடத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் மகன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?என்ற பதற்றம் உருவாகிறது. இடை இடையே காட்டப்படும் கொலைகாரனின் வித்தியாசமான உருவமும், பிரத்யேக திகில் மியூசிக்கும் படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆவலை தூண்டிவிடும்படி அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான ரகசியம் பற்றி பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். அதன்படி படத்தில் மாஸ்க் அணிந்து வரும் வில்லன் கேரக்டர் யார் என்பதே படக்குழுவில் பணியாற்றும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்றும், இயக்குநர் மற்றும் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தவிர பிறருக்கு தெரியாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த மாஸ்க் போட்ட வில்லன் யார் என்பதை கிளைமேக்ஸில் பார்க்கும் போது ஆடிப்போயிடுவீங்க என ட்விஸ்ட் வைத்துள்ளார்…

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus