“நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும்”… கமிஷனரிடம் புகார்!

  • March 22, 2022 / 07:01 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கும் இந்த படத்தை வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’யின் பெயர் ரௌடிகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் இந்நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரான கண்ணன் புகார் அளித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் அளித்த புகார் மனுவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus