சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.
அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், காட்டேரி, யசோதா, மைக்கேல்’ என படங்கள் குவிந்தது.
வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ‘கொன்றால் பாவம்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசுகையில் “பிரபல டிவி சேனல் தலைவர் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக என்னிடம் நேரில் வந்து பேசினார். நான் அவரிடம் சம்பளம் பற்றி பேசினேன். உடனே அவர் மற்ற விஷயங்களுக்கு ஹோட்டலில் ரூம் போட்டுக்கலாமா?ன்னு கேட்டார். உடனே, அவரை வெளியே போ என்று கூறி என் வீட்டை விட்டு அனுப்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.