தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

  • September 1, 2023 / 08:16 PM IST

ம லையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். இவர் ‘மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். மேகதீர்த்தம், அச்சயன்ஸ், கல்கி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, ‘சந்தனமலா, ஆத்மசகி, தேவஸ்பர்ஷம்’ போன்ற டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அபர்ணா நாயருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், 31 வயதே ஆன நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் தற்கொலை செய்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus