ரூ.6 கோடி சம்பளம் மட்டுமா? தினமும் இத்தனை லட்சம் நஷ்டமாகுது… மேடையில் நயன்தாராவை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்!

  • November 11, 2021 / 07:19 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், இயக்குநர் யுவராஜ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில் “நடிகர்களுக்கு கேரவன் கொடுக்கிறதுக்கே தயாரிப்பாளர் கஷ்டப்படுகிறார். முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டும் தான் கேரவன் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 12 அல்லது 13 கேரவன் தேவைப்படுகிறது. அதை நான் கண்டிக்கிறேன்.

அப்புறம் நடிகை நயன்தாரா ஷூட்டிங் வருகையில் அவருடன் 7 assistant வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் சம்பளம். அப்போ ஒரு நாளைக்கே ரூ.1 லட்சம் ஆகுது, 50 நாள் ஷூட்டிங் என்றால் ரூ.50 லட்சம் ஆகிறது. இதுமட்டுமில்லாமல், இப்போது ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. உங்க எல்லாருக்கும் கொடுத்துவிட்டு தயாரிப்பாளர் எங்கு போவார்? அவர் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா?” என்று பேசியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus