8 மொழிகளில் உருவாகும் பிரபாஸின் 25-வது படம்… இயக்குநர் யார் தெரியுமா?

  • October 7, 2021 / 06:06 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம். ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகுமாம். ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம். இப்படம் அடுத்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸாகுமாம்.

நாக் அஷ்வின் இயக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ஸ்பிரிட்’ (Spirit) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளாராம். பிரபாஸின் 25-வது படமான இதனை ‘டி-சீரிஸ் – பத்ரகாளி பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 8 மொழிகளில் உருவாகுகிறதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus