சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் பிரபாஸ் – தீபிகா படுகோன்… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

  • January 29, 2021 / 03:37 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) துவங்கத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோன் டூயட் பாடி ஆடப்போகும் முதல் படம் இதுதானாம்.

இதில் முக்கிய ரோலில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். தற்போது, இந்த படத்துக்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்கவும், டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்யவும் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus