தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் ஸ்டில்ஸை ஷேர் செய்த பிரணிதா!

  • January 25, 2023 / 09:14 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2021-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், நிதின் ராஜு – பிரணிதா சுபாஷ் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு ‘ஆர்னா’ (ARNA) என பெயர் சூட்டியுள்ளதாக பிரணிதாவே இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரணிதா சுபாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus