மாஃபியா படத்திற்காக அருண் பிரசன்னா சம்பளம் ?

  • September 3, 2022 / 08:38 PM IST

நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் . முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் இவர் . இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்தார் . கவுண்டமணி , செந்தில் , மணிவண்ணன் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . 1995ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .அதன் பிறகு பிரியம் , காத்திருந்த காதல் , கங்கா , கௌரி என பல படங்களில் நடித்து வந்தார் . நல்ல திறமையான நடிகராக இவர் இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு இவரது ஆரம்ப காலத்தில் கொடுக்கவில்லை . ஆனாலும் இவர் தொடர்ந்து பாண்டவர் பூமி , இயற்கை , மலை மலை , என் நடித்து வந்தார் . அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்கிற படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் .அதன் பிறகு இவருக்கு தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவானது . இப்போ பல படங்களில் நடித்து வருகிறார் . இவர் பல வருடம் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்தார் .

அருண் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஃபியா . இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கி இருந்தார் .பிரியா பவனி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் மாஃபியா 2 படம் பற்றி கார்த்திக் நரேனிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் . விரைவில் வரும் என்று சொன்ன கார்த்திக் நரேன் , நடிகர் அருண் விஜய்யிடம் இது பற்றி கேட்டுள்ளார் . ஆனால் நடிகர் அருண் விஜய் தற்போது தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இது ஒரு பக்கம் இருக்க மாஃபியா பார்ட் 1 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பிரசன்னா இந்த படத்திற்கு 35 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus