நேரலையில் மீராமிதுன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர்!

  • August 26, 2020 / 08:09 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் இவரை வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டியும் தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்கள் என்று பேசியும் வருகிறார்கள். அதையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார் மீராமிதுன்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தற்போது மீராமிதுனை நேருக்கு நேர் மோத வருமாறு வம்பிழுத்து பேசியிருந்தார்.

இவர் அழைப்பை ஏற்று மீரா மிதுன் நேரலையில் தயாரிப்பாளர் அவருடன் பேசுவதற்கு இன்று ஏற்பாடுகள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தரின் நேரலையில் மீராமிதுன் பேசுவதை பார்ப்பதற்கு பலர் ஆவலாக இருந்த நிலையில் மீராமிதுன் உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி இந்த நேரலைக்கு வராமல் நின்று விட்டார் என்று ரவீந்தர் இந்த நேரலையில் பேசியுள்ளார். இதனால் நடக்கவிருந்த காரசாரமான விவகாரம் நின்றுவிட்டது என்று நெட்டிசன்கள் ஏமாற்றத்தில் உள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus