புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ‘கந்தட குடி’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • November 7, 2022 / 06:13 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் கன்னட படங்கள் குவிந்தது. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

நடிகர் புனித் ராஜ்குமார் தயாரித்து, நடித்த கடைசி படமான ‘கந்தட குடி’ அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (அக்டோபர் 29-ஆம் தேதி) முன்னிட்டு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஆவணப்படமான இதனை இயக்குநர் அமோகவர்ஷா இயக்கியிருக்கிறார்.

இதற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், பிரதீக் ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.26.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus