புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ரிலீஸான ‘கந்தட குடி’… எமோஷனலான ரசிகர்கள்!

  • October 28, 2022 / 08:27 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது.

1999-ஆம் ஆண்டு அஷ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புனித் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

நடிகர் புனித் ராஜ்குமார் தயாரித்து, நடித்த கடைசி படமான ‘கந்தட குடி’ அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (அக்டோபர் 29-ஆம் தேதி) முன்னிட்டு இன்று (அக்டோபர் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. ஆவணப்படமான இதனை இயக்குநர் அமோகவர்ஷா இயக்கியிருக்கிறார். இப்படத்தை பார்த்த புனித்தின் ரசிகர்கள் மிகவும் எமோஷனலாக ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus