“முதலில் ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாட சமந்தா மறுத்துவிட்டார்”… உண்மையை போட்டுடைத்த ‘புஷ்பா’ இயக்குநர்!

  • December 21, 2021 / 04:42 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளதாம். இதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்ஜெய், ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ், அஜய் கோஷ் நடித்துள்ளனர். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடனமாடியிருக்கிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா இருவரும் நெருக்கமாக நடித்துள்ள ஒரு காட்சியை ட்ரிம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், படத்தில் ஐட்டம் பாடலில் ஆடியதற்கு கிடைத்த வரவேற்பு குறித்து இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் நடிகை சமந்தா. இது தொடர்பாக இயக்குநர் சுகுமார் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “முதலில் இப்பாடலில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். பின்னர் அவரிடம் பேசி சம்மதிக்க வச்சோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus