ஜெயலலிதாவை சந்தேகப்பட்ட ராதா ரவி ! என்ன காரணம் தெரியுமா ?

  • December 7, 2022 / 11:35 AM IST

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக அற்புதமாக நடித்து ரசிகர்களிடம் கை தட்டு வாங்கும் திறன் கொண்ட நடிகர் ராதா ரவி . வில்லனாக மிரட்டி வந்த ராதா ரவி தற்போது பல வகையான பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

நடிகர் ராதா ரவி புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டவர் . சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரசியமான ஒரு விஷயத்தை பகிர்ந்து உள்ளார் .அதில் “அ.தி.மு.க. சார்பாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது பல விஷயங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன். அப்போது ஏற்கெனவே நான் படித்த புத்தகங்களில் இருந்து பல விசயங்களை கோட் செய்வேன். அவை ஆங்கிலத்தில் இருந்தால் அவற்றின் தமிழாக்கத்தையும் சொல்வேன். அடுத்த நிமிடமே, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு சீட் வரும். அதில், ‘எந்தெந்த புத்தகங்களில் இருந்து கோட் செய்தீர்கள். அவற்றை தர முடியுமா.. படித்துவிட்டு தருகிறேன்’ என்று இருக்கும் என்று ககூறினார் .

ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட புத்தகங்களை அளிப்பேன். ஒரு வாரத்தில் திருப்பி அளித்துவிடுவார். ஒரு முறை எனக்கு சந்தேகம் வந்தது ‘உண்மையிலேயே ஜெயலலிதா படிக்கிறாராஅல்லது சும்மா வாங்கி வைத்து திருப்பி அனுப்புகிறாரா’ என்று . எனவே ஒரு தடவை திரும்பி வந்த புத்தகங்களை புரட்டினேன்.. முக்கியமான வார்த்தைகள்.. பக்கங்களில் தனது பச்சை இங்க் பேனாவால் குறிப்பிட்டு இருந்தார் ஜெயலலிதா. பின்பு ஒரு பெரிய தலைவரை சந்தேகப்பட்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார் ராதா ரவி .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus