ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் இணையும் திரைப்படம்!

  • October 27, 2020 / 10:52 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ், சினிமாவில் மட்டுமல்லாது மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” என்ற திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் ராகவா லாரன்ஸின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் இவர்கள் தகவலை கூறியுள்ளார்கள். இந்த நட்சத்திர கூட்டணி இணையும் படம் குறித்த தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus