வெளியான நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

  • October 29, 2020 / 06:30 PM IST

நடன இயக்குனராக இருந்து, பின்பு நடிகராக மாறி, பின்பு இயக்குனராக மாறி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் ராகவாலாரன்ஸ். இவர் 1989ஆம் வருடம் டி.ஆர்.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “சம்சார சங்கீதம்” படத்தில் ஒரு பாடலில் ஆடியது மூலம் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார்.

இவர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிபாரிசு செய்தது தான் காரணம் என்று லாரன்ஸ் அடிக்கடி கூறுவார்.

பின் 1999ஆம் வருடம் தெலுங்கு படமான “ஸ்பிட் டான்ஸர்” படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார் லாரன்ஸ். இதை தொடர்ந்து தமிழில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “அற்புதம்” படத்தில் நடிகராக அறிமுகமானார்.

எனினும் அவரது படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில், 2007 ஆம் ஆண்டு “முனி” என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்தார் லாரன்ஸ். இந்தப் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்துள்ளார்.

தற்போது தன் பிறந்தநாள் கொண்டாட்டமாக தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு “ருத்ரன்” என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus