ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

  • January 31, 2023 / 06:03 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநராக இருக்கிறார் நெல்சன் திலீப்குமார் . தனது முதல் படமான கோலமாவு கோகிலா படம் சிறப்பாக இயக்கி இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது . அதன் பிறகு இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார் .

இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது . இதனை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற படத்தை இயக்கினார் நெல்சன் . இந்த படம் படுதோல்வி அடைந்தது . இதனால் நெல்சன் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார் அந்த தருணத்தில் தான் நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது .

ஜெயிலர் என்று பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் மோகன் லால் , சுனில் குமார் , தமன்னா , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் . படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் படத்தின் முதல் பாதி முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும் நெல்சன் முதல் பாதி படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் போட்டுகாமித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

முதல் பாதி படத்தை பார்த்த ரஜினி சூப்பர் போட்ட உழைப்பிற்கு சரியான பலன் கிடைத்துள்ளதாகவும், மகிழ்ச்சி அடைவதாகவும் ரஜினி கூறியுள்ளார். ஒரு படம் எடுக்கும்போதே அந்தப் படம் வெற்றி பெறுமா என்பது தெரிந்துவிடும். ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ரஜினி கூறியுள்ளார் . இதனால் இயக்குநர் நெல்சன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus