ரஜினி – சிவா காம்போவில் ‘அண்ணாத்த’… புது ஷெடியூல் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • February 24, 2021 / 12:14 PM IST

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

இதனையடுத்து புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் இப்படக்குழுவினருக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது 4 பேருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிக்கு டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்தது. இருப்பினும் படத்தின் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 27 அன்று ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது, ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் சென்னையில் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புது ஷெடியூலுக்காக ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus